states

img

அமலாக்கப் பிரிவை ஏவிய மோடி அரசு

ராஞ்சி, ஜன., 31- நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு தொடர் பாக அமலாக்கத்துறை மேற்கொண்ட கைது நெருக்கடியால் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் (ஜேஎம்எம்) கட்சித் தலைவரும், ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரனுக்கு நிலக்கரி சுரங்க ஊழலில் தொடர்புள்ளதாக கூறி 10 முறை சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. 9-ஆவது சம்மனில் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், ஜனவரி 31-ஆம் தேதிக்குள் ஆஜராக 10-ஆவது சம்மனை அனுப்பி சர்ச்சையை ஏற்படுத்தியது அமலாக்கத்துறை.  

தில்லியில் 2 நாட்கள் சட்ட ஆலோச னை மேற்கொண்டு புதனன்று ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆஜரானர். கிட்டத்தட்ட 10 மணி நேர விசாரணைக்குப் பின்  அமலாக்கத்துறையின் கைது நெருக்கடி யால் இரவு 9 மணியளவில் தனது கட்சி எம்எல்ஏ-க்கள் மற்றும் கூட்டணி கட்சி யான காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்று ராஜினாமா செய்தார்.

புதிய முதல்வராக ஜேஎம்எம் மூத்த தலைவர் சம்பாய் சோரன் பெயரை காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ் தாக்கூர் முன்மொழிந்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.  புதனன்று காலை முதல் இரவு வரை அமலாக்கத்துறையின் கைது நெருக்கடியால் ஜார்க்கண்ட் மாநிலமே பரபரப்புக்கும் பதற்றத்திற்கும் உள்ளா னது. இந்நிலையில் இரவு 9 மணி அளவில் அவர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து உடனடியாக அவர் ஆளுநர் மாளி கைக்கு சென்று ராஜினாமா கடிதம் அளித்த தாகவும் தகவல்கள் வெளியாகின.